145
மூதூர் மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலுள்ள தோட்டப் பயிர்ச்செய்கையாளர் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயன்முறையின் கீழ் விவசாயம் உள்ளிட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையையும் இம்முறை மேற்கொண்டுவருகின்றனர். இதனடிப்படையில் மூதூர், சம்பூர், இறால்குழி, வேதத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேட்டுநிலங்களில் நெற்செய்கையையும் மற்றும் மரவள்ளி, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பல்லின மரக்கறி பயிர்களையும் செய்கை பண்ணியுள்ளனர்.
(மூதூர் தினகரன் நிருபர்)