Friday, March 29, 2024
Home » முதலையின் பிடியில் சிக்கிய நபர்

முதலையின் பிடியில் சிக்கிய நபர்

by Gayan Abeykoon
November 15, 2023 1:00 am 0 comment

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த ஒருவர் முதலைப்பிடியில் சிக்கி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் காலில் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் (13) அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ரொட்டைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாடுகளை மேய்ப்பதற்காக ரொட்டைக் கிராமத்திலுள்ள குளமொன்றை கடக்க முற்பட்ட போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு முதலைப்பிடியில் சிக்கியுள்ளார்.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT