Thursday, March 28, 2024
Home » ஏறாவூரில் கொரிய மொழி பயிற்சி, செயலமர்வுகள்

ஏறாவூரில் கொரிய மொழி பயிற்சி, செயலமர்வுகள்

by Gayan Abeykoon
November 15, 2023 1:00 am 0 comment

றாவூர் பிரதேச இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு கொரிய மொழி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கொரிய நாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலான செயலமர்வு ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் பொது நூலக மண்டபத்தில் நகர சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் சனசமூக உததியோகத்தர் ஏ. ஹாறூன் உட்பட நூலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கொரிய மொழி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான துறைசார் அனுபவம் பெற்ற ஏ.எம். ஜெமீல் வளவாளராக கலந்து கொண்டு கொரிய நாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பான ஆலோசனைகளை முன்வைத்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எறாவூர் நகரசபையின் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கொரிய நாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

(ஏறாவூர் சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT