Friday, April 19, 2024
Home » கம்பளையில் மலசலகூடத்திலிருந்து ஊழியர் ஒருவரது சடலம் மீட்பு

கம்பளையில் மலசலகூடத்திலிருந்து ஊழியர் ஒருவரது சடலம் மீட்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

ம்பளை கல்வி வலயத் திணைக்களத்தினுடைய மலசலகூடத்திலிருந்து அலுவலக ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்

அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்த, கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திமால் குருகே என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (13) கடமைக்கு வந்த இவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதும், பதில் வராமையால் இவரைத் தேடியதாகவும், இதன்போதே இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

மலசலகூடக் கதவைத் திறந்து பார்த்த போது, கீழே விழுந்து இவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பளை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT