Friday, April 19, 2024
Home » லேக் ஹவுஸ் நிறவனத்திற்கு வந்த இரா. துரைரத்தினம்

லேக் ஹவுஸ் நிறவனத்திற்கு வந்த இரா. துரைரத்தினம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

 தினகரன் பத்திரிகையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கான செய்தியாளராக முன்னர் பணியாற்றியவரும், பிரபல நூலாசிரியரும், கட்டுரை எழுத்தாளருமான இரா. துரைரத்தினம் நேற்று லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு வருகை தந்து தினகரன் ஆசிரிய பீடத்தினருடன் நட்புரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார். புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் தற்போது வசித்து வருகின்ற ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் தொடர்ந்தும் தினகரனுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வருகின்றார்.

‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ள இரா. துரைரத்தினம், நேற்று தினகரனுக்கு வருகை தந்த வேளையில், தனது அந்நூலை தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவரிடம் கையளித்ததுடன், தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், தினகரன் எஸ். பாண்டியன் மற்றும் ஆசிரியபீடத்திலுள்ள ஏனைய சகநண்பர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பையும் நடத்தினாரென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT