99
திறப்பனை பிரதேச செயலக பகுதியில் இளம் விவசாயி ஒருவரினால் அரை ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டு 70 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியுள்ளார்.
விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச் செய்கை முறையை பயன்படுத்தி அவர் அந்த விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பாரம்பரிய முறையில் அரை ஏக்கரில் 6000 மிளகாய் செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். ஆனால் அதிக அடர்த்தி பயிர்ச் செய்கை முறையில் 13,000 மிளகாய் செடிகளை வளர்த்து குறித்த இலாபத்தை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் மேற்கு தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்