Saturday, April 20, 2024
Home » போதைக்கு அடிமையானவர் புனர்வாழ்வுக்கு அனுப்பிவைப்பு
யாழ்ப்பாணத்தில்

போதைக்கு அடிமையானவர் புனர்வாழ்வுக்கு அனுப்பிவைப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு சிறுதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது, இந்த இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை மருத்துவ அறிக்கையில் தெரியவந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர், மருத்துவ அறிக்கையுடன் இந்த இளைஞரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (13) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய போதே, இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த இளைஞர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT