தீபாவளிப் பண்டிகையையிட்டு வவுனியா கந்தசுவாமி கோயில் பிரதான மண்டபத்தில் தபால் முத்திரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்துக்களின் தீபாவளி தினத்தையிட்டு தபால் முத்திரையை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார வெளியிட்டு வைத்ததுடன், முதலாவது முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மதகுருமார் ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா விசேட நிருபர்