183
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை (13) இரவு பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டு முன் கதவுக்கு சேதம் ஏற்பட்டதுடன், வீட்டு வாசலில் இருந்த செருப்பு மற்றும் சப்பாத்துகள் தீயில் கருகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். விசேட நிருபர்