66
தீபாவளிப் பண்டிகையையொட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அண்மையில் வழங்கி வைத்தனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களே யாழ். சிறைச்சாலையில் உள்ளனர்.
இவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புப்பண்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் வழங்கி வைத்தனர்.
யாழ். விசேட நிருபர்