யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியுடன் தன்னை தொடர்புபடுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்படுவதால், அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததாக, அப்பல்கலைக்கழகப் பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்தார். ஊடகங்களில் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக பேராசிரியர் வேல்நம்பியை தொடர்புபடுத்தி வெளிவந்த செய்தி தொடர்பாக அவரிடம் வினவிய போதே, இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார். இந்தச் செய்தியை முகநூலில் பதிவிட்டவருக்கு எதிராக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்