Friday, March 29, 2024
Home » முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு; மூவர் கைது

முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு; மூவர் கைது

- தாயின் 2 ஆவது கணவனால் கருத்தரித்த 13 வயது சிறுமி

by Prashahini
November 14, 2023 4:49 pm 0 comment

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவன் 13 வயது சிறுமியிடம் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று (13) முல்லைத்தீவு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் பா.ம.சி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்க உட்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு விசேட நிரூபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT