Friday, April 19, 2024
Home » ஐ.நா. சமாதானத் தூதுவர் பேரவை உறுப்பினராக ஹஸன் மௌலானா அல்-காதிரி நியமனம்

ஐ.நா. சமாதானத் தூதுவர் பேரவை உறுப்பினராக ஹஸன் மௌலானா அல்-காதிரி நியமனம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

க்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையின் அங்கத்தவராக இலங்கை தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-யதலைவர், அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையினால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச சமாதான மாநாடு ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நியமனச் சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதானத் தூதுவர், பேராசிரியர் டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்னாயக உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT