Wednesday, April 24, 2024
Home » லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் கைது

லொத்தர் சீட்டு இலக்கத்தை மாற்றிய படைவீரர் கைது

by damith
November 14, 2023 8:00 am 0 comment

லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலக்கத்தை மாற்றியமைத்த படைவீரர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான லொத்தர் சீட்டில் இலக்கத்தை நூதனமான முறையில் மாற்றி 2,000 ரூபா பணப்பரிசில் வென்றதாக முகவரிடம் பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக, இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டு முகவர் படைவீரரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்நபர் இதற்கு முன்னரும் ஹொரண பிரதேசத்தில் லொத்தர் சீட்டு முகவர் ஒருவரை ஏமாற்றி, பணம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT