165
ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் வை.ஏ.பி. செந்தில் பாண்டியன் கொழும்பு ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்தார்.
அந்நிகழ்வின் போது செந்தில் பாண்டியனை ஆலய தர்மகர்த்தா தெ. பரமநாயகம் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் சாய்சரணாலயத்தில் சீரடி பாபாவிற்கு பிரசாதம் வழங்குவதையும் காணலாம்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாசித்தர்கள் அறக்கட்டளை நம்பிக்கைப் பொறுப்பாளர் எச்.எச்.விக்கிரமசிங்க அருகில் காணப்படுகின்றார்.