Thursday, March 28, 2024
Home » நெஸ்டமோல்ட் மரதன்: ரங்கதாரிக்கு முதலிடம்

நெஸ்டமோல்ட் மரதன்: ரங்கதாரிக்கு முதலிடம்

by damith
November 14, 2023 11:02 am 0 comment

விளையாட்டு அமைச்சு மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் இணைந்து காலியில் நடத்திய அகில இலங்கை பாடசாலை அரை மரதன் ஒட்டப்போட்டியின் பெண்கள் பிரிவில் வெலிமடை, ஸ்ரீ தேவானன்த மத்திய

கல்லூரியின் டபிள்யு.டி.டி ரங்கதாரி குமாரசிங்க வெற்றியீட்டினார். 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்தப்போட்டியை ரங்கதாரி 1:33.36 மணி நேரத்தில் நிறைவு செய்தார். இதன் இரண்டாவது இடத்தை மொனராகலை, சேனபத்தி மத்திய கல்லூரியின் டி.எம். சமலி சிறிவர்தன வென்றதோடு, மூன்றாவது இடத்தை எல்.பீ.ஜி. பிரபோதா இமாஷனி கைப்பற்றினர். இந்த அரை மரதன் போட்டிகளில் 300க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை (11) நடைபெற்ற இந்த மரதன் போட்டியின்் பரிசளிப்பு நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் விலி கமகே, நெஸ்லே லங்கா பிரதித் தலைவர் பந்துல எகொடகே உட்பட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT