189
வவுனியா கந்தசாமி கோயிலில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் அரச அனுசரணையுடன் தேசிய தீபாவளிப் பண்டிகை சம்பிரதாயபூர்வமாக நேற்றுமுன்தினம் (12) கொண்டாடப்பட்டது.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து தேசிய தீபாவளி பண்டிகையை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய தீபாவளி வாழ்த்துச் செய்தி பற்றிய தகவலை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வு சமய, கலாசார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து நடத்தப்பட்டது.
(கோப்பாய் குறூப் நிருபர்)