Thursday, April 25, 2024
Home » சம்மாந்துறை பிரதேச வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

சம்மாந்துறை பிரதேச வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

by damith
November 14, 2023 10:24 am 0 comment

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட செயலகம் சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச வர்த்தகர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளான முஹம்மட் ஸாஜீத் ஸமான், எம்.எச்.எம்.றிபாஜ் ஆகியோர் பிரதான வளவாளராக கலந்து கொண்டு, வியாபார செயற்பாடுகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட, ஒழுங்குகள், விதிமுறைகள் மற்றும் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்க கட்டுப்பாட்டு விலைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போது வர்த்தகர்களினால் எழுப்பப்பட்ட வினாக்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி எம்.எம்.நியாஸ், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(மாளிகைக்காடு குறூப், சவளக்கடை குறூப் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT