Home » தமிழர்களுக்கான தீர்வை வழங்காவிடின் சர்வதேச துணையுடன் களமிறங்குவோம்

தமிழர்களுக்கான தீர்வை வழங்காவிடின் சர்வதேச துணையுடன் களமிறங்குவோம்

by damith
November 13, 2023 8:20 am 0 comment

தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு வழங்காத பட்சத்தில், சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர், உணர்ச்சிகரமான இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது 90 வயதிலும் தளராதுள்ள சம்பந்தன் தெரிவித்ததாவது:

தேசிய இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.இதற்கான உரிமை போராட்டத்தை அடக்குமுறைாயால் ஒடுக்க முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும். இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க, முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் .

இதனூடாகவே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT