124
நுவரெலியா – ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். குடியிருப்புக்கு அருகாமையிலே, இவ்விருவரையும் குளவி கொட்டியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குளவிகளிலிருந்து, தாயை காப்பாற்ற சென்ற வேளையிலே மகனும் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். இருவரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 59 வயதுடைய மகன் அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த 85 வயதான தாய், நேற்று உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே இவர்கள் உயிரிழந்தனர்.