Thursday, March 28, 2024
Home » திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

by damith
November 13, 2023 7:30 am 0 comment

திருகோணமலை – முருகாபுரி பகுதியில் 10 610 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது 38 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 6 கிலோ 320 கிராம் கேரளா கஞ்சாவும், 43 வயதுடைய ஆண் ஒருவரிடமிருந்து 4 கிலோ 290 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கஞ்சா கொண்டு செல்லப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT