194
திருகோணமலை – முருகாபுரி பகுதியில் 10 610 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது 38 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 6 கிலோ 320 கிராம் கேரளா கஞ்சாவும், 43 வயதுடைய ஆண் ஒருவரிடமிருந்து 4 கிலோ 290 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கஞ்சா கொண்டு செல்லப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.