குடிபோதையில் சிலருடன் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் சுயநினைவிழந்து வீதியில் விழுந்து காணப்பட்ட நிலையில் அவரை எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமான சம்பவம் ஒன்று எம்பிலிப்பிட்டிய பனாமுர கோங்கட்டுவ பிரதேசத்தில் இன்று (13) இடம் பெற்றுள்ளது.
குடிபோதையில் காணப்பட்ட 38 வயதான இவர் முன்தினம் (12) இரவு சிலருடன் ரகளையில் ஈடுபட்டிருந்ததாகவும் அதன் பின்னரே இவர் மரணமடைந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இவரது மரணம் தொடர்பில் 23,55,57 வயதுகளையுடைய மூவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்