115
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் மாலை தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் (11) இரவு, இலங்கையிலிருந்து மாலை தீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க இந்நபர் வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்போது, அவரது பொருட்களை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரிவோல்வரை போன்ற துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து,58 வயதான மலைதீவைச் சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.