Saturday, April 20, 2024
Home » திருகோணமலையில் 3.4 ரிச்டரில் பூதியதிர்ச்சி

திருகோணமலையில் 3.4 ரிச்டரில் பூதியதிர்ச்சி

சேதங்கள் எதுவுமில்லை

by damith
November 13, 2023 6:00 am 0 comment

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் நேற்று நண்பகல் 1.15 மணியளவில், சிறு பூமி அதிர்ச்சியொன்று இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

பூகற்பவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அறிக்கைக்கு இணங்க, 3.4 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, மேற்படி பூமியதிர்ச்சியினால் எந்த ஒரு பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்பூமியதிர்ச்சி கோமரங் கடவல, ஹொரவப்பொத்தான, கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் உணரப்பட்டதாகவும் அந்த பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தகைய சிறு பூமி யதிர்ச்சிகள் இடம்பெறுவது இயல்பானதே என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT