மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக
ஆர். பி.கே.பிளான்டேசனுக்கு சொந்தமான மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
அடைமழை காரணமாக இரண்டு தொடர் லயன் குடியிருப்பிலுள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், பாலர் பாடசாலை ஆகிய இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அடிப்படை வசதிகளை தோட்ட நிர்வாகம் இதுவரை செய்து கொடுக்கவில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 15 பாடசாலை மாணவர்கள் இருப்பதாக தெரியவருகின்றது.
இதுகுறித்து, பல தடவைகள் தோட்ட நிர்வாகத்திடமும், மலையக அரசியல் தலைவர்களிடமும், முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், தமக்கான உரிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)