Friday, April 26, 2024
Home » சம்பியனானது இருதயபுரம் அணி

சம்பியனானது இருதயபுரம் அணி

by damith
November 13, 2023 12:14 pm 0 comment

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இருதயபுரம் நீர் வழங்கல் காரியாலய அணி சம்பியனானது. கடந்த சனிக்கிழமை (11) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் பிராந்திய முகாமையாளர் எம்.குமாரதாஸ் தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இருதயபுரம் மற்றும் செங்கலடி காரியாலய அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இருதயபுரம் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 61 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய செங்கலடி அணி 5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஐந்து ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT