இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவுதினம், யாழ். தென்மராட்சியில் நேற்றுக் காலை அனுஷ்டிக்கப்பட்டது.
தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள்
உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர், ரவிராஜின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.