இது மொட்டுக் கட்சியின் ஆட்சியென்பதுடன், இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெறுவதற்கு இடமளியோமென, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனத் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,”பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை தொடர்பாக தீர விசாரணை செய்யப்பட வேண்டுமென்பதுடன், அதன் பின்னரே முடிவொன்றுக்கு வர முடியும். எமது நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் நிலையை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது.
மேலும், ஆட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டாலும், மொட்டுக் கட்சியின் ஆட்சி தொடர்கின்றது. நாட்டின் பொருளாதார நிலைமையும் வழமைக்கு திரும்பி வருகின்றது” எனத் தெரிவித்தார்.