அஞ்சலோ மத்தியூஸ் மீதான டைம் அவுட் விவகாரத்தில் ஷகீப் அல் ஹசனை சாடிய பங்களாதேஷ் பந்துவீச்சு பயிற்சியாளர் அலன் டொனால்ட் இந்த உலகக் கிண்ணத்துடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்தியூஸுக்கு டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்புக் கேட்ட ஷகீப் அல் ஹசனின் செயல் பற்றி கவலையை வெளியிட்டிருந்த அலன் டொனால்ட், மைதானம் சென்று ஷகீபை தடுக்க நினைத்ததாக தெரிவித்திருந்தார்.
டொனால்டின் இந்த கருத்துக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (09) புனேவில் நடந்த அணிக் கூட்டத்தின்போது அலன் டொனால்ட் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு தனது முடிவை வெளிப்படுத்தினார். அதில் இந்த உலகக் கிண்ண தொடருடன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் இன்று (11) மோதவுள்ளது.