சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி அண்மையில் (04) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இப் போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். ரியால் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கெளரவ அதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி. கருணாகரன், சிறப்பு அதிதிகளாக அரச சட்டத்தரணிகளான சக்கி இஸ்மாயில், எம்.ஏ.எம். லாபீர் ஆகியோர் பங்கேற்றனர். ஆறு அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டியில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் அணியினை எதிர்த்து கல்முனை மேல் நீதிமன்ற அணி மோதியது. முதலில் துடுப்படுத்தாடிய கல்முனை மேல் நீதிமன்ற அணி 08 ஓவர்கள் முடிவில் 63 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்படுத்தாடிய சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தனர்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்