Friday, March 29, 2024
Home » ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 5 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 5 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு

- ரூ. 925 மில்லியன் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
November 10, 2023 6:42 pm 0 comment

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 5 நிறுவனங்களின் வருடாந்த இலாபமான, ரூ. 925 மில்லியனை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் இருந்து ரூ. 350 மில்லியன், லங்கா பொஸ்பேற் நிறுவனம் ரூ. 300 மில்லியன், பி.சி.சி. நிறுவனம் ரூ. 100 மில்லியன், தேசிய உப்பு நிறுவனம் ரூ. 100 மில்லியன், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் ரூ. 75 மில்லியன் ரூபா என, வருடாந்த இலாபத் தொகையாக ரூ. 925 மில்லியன் திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் உரிய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT