வட மாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு வரைவில் தீர்வு காண்பது தொடர்பில், கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு தீர்வு காணும் நோக்கில் ‘யாழ்ப்பாண நதி’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, எமது பாரம்பரியத்துக்கு ஏற்ப தண்ணீர் பிரச்சினையை கையாள்வது குறித்து தாம், ஆலோசித்து வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார். தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு, கடலில் கலக்கும் நதி நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.