Friday, March 29, 2024
Home » தென் கொரியாவில் மனிதனை அடித்து கொலை செய்த Robo
உலகில் முதல் அதிர்ச்சித் தகவல்

தென் கொரியாவில் மனிதனை அடித்து கொலை செய்த Robo

by sachintha
November 10, 2023 7:33 am 0 comment

தென் கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் இயந்திர மனிதனால் (ரோபோ) அங்கு தொழில் புரியும் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர், இந்த ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்கறி பெட்டிகளை பேக் செய்யும்போது உணவுப் பெட்டிகளிலிருந்து தொழிலாளியை வேறுபடுத்திப் பார்க்கத் தவறிய ரோபோ, அவரைப் பிடித்துஅவரது உடலை கன்வேயர் பெல்ட்டில் தள்ளி, அவரது முகத்தையும் மார்பையும் நசுக்கியதாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT