கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 67ஆவது பிறந்த தினமான நாளில் (10) அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் கீர்த்தியையும் வழங்க வேண்டுமென சர்வதேச இந்து மத பீடச் செயலாளர், கலாநிதி சிவநெறிக் காவலர் சிவ ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா வாழ்த்தியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,எப்பொழுதும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதில் முனைப்பாக செயற்பட்டு வரும் அரசியல் தலைவராவார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண வேண்டும். அத்துடன், இந்திய அரசின் உதவியுடன் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்பதிலும் ஆணித்தரமாக உறுதியாக செயற்பட்டு வருபவர்.
மக்களுக்கான அவரது சேவை மேலும் வளரவும், தொடரவும் எல்லாம் வல்ல இறைவன் அருளையும் கீர்த்தியையும் கொடுக்க வேண்டுமென, சர்வதேச இந்து மத பீடம் சார்பாக ஆசிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.