Friday, March 29, 2024
Home » கோட்டைக்கல்லாற்றில் கதை சொல்லல் நிகழ்வு

கோட்டைக்கல்லாற்றில் கதை சொல்லல் நிகழ்வு

by sachintha
November 10, 2023 9:23 am 0 comment

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழுள்ள கோட்டைக்கல்லாறு பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வு கோட்டைக்கல்லாறு விநாயகர் பாலர் பாடசாலையில் நூலகப் பொறுப்பாளர் திருமதி வினோதா அன்ரோ தலைமையில் நடைபெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாடசாலைகளில் வாசிப்பு போட்டிகள் மற்றும் நூல் அன்பளிப்பு, கதை சொல்லல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுவருகின்றன. விநாயகர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஆடல், பாடலுடன் கதை சொல்லல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் வளவாளராக கதை சொல்லி அகரம் செ.துஜியந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கதை சொல்லி மகிழ்வித்தார். இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியைகளான ஜெ.மனோரஞ்சிதம், செ.சரணிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT