Thursday, April 25, 2024
Home » களுத்துறை முஸ்லிம் ம. கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா

களுத்துறை முஸ்லிம் ம. கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா

by sachintha
November 10, 2023 10:01 am 0 comment

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த பரிசளிப்பு விழாவும் கல்லூரியின் 105ஆவது வருட பூர்த்தி விழாவும் நேற்று (09) கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக ‘சயீடா’ அமைப்பின் இலங்கை இ​ணைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸி மற்றும் சீன நாட்டு இலங்கைத்தூதுவர் சீ ஸென் ஹொங் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் களுத்துறை வலய கல்விப்பணிப்பாளர்கள் உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT