Friday, April 26, 2024
Home » நீண்டகாலமாக சேவையாற்றியோரை கௌரவித்த மக்கள் வங்கி

நீண்டகாலமாக சேவையாற்றியோரை கௌரவித்த மக்கள் வங்கி

by sachintha
November 10, 2023 10:07 am 0 comment

‘இருபத்தைந்து ஆண்டுகள் சேவை’ விருது நிகழ்வில், இருபத்தைந்து ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்துள்ள அர்ப்பணிப்புமிக்க தனது பணியாளர்களை மக்கள் வங்கி அண்மையில் கௌரவித்துள்ளது. கொழும்பு 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச, மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர் கிளைவ் ஃபொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாக முகாமைத்துவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் வங்கியில் மிகவும் போற்றத்தக்க வகையில் இருபத்தைந்து ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்துள்ளதைப் பாராட்டுவதில், மொத்தமாக 886 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு, பெறுமதிப்பு மிக்க தங்க விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களுக்குப் புறம்பாக, தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்துள்ள 52 சிரேஷ்ட பணியாளர்களுக்கு விசேட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT