சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய ‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நாளை 11 ஆம் திகதி பிற்பகல் 3.45 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘அன்பின் பாதையில் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமலை நவம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி கலந்து கொள்வார். சிறப்பு விருந்திரனராக சிரேஷ்ட எழுத்தாளர் க. தேவகடாட்சம் கலந்து கொள்வார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தருமாறு அனைவருக்கும் விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.