தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.
தபால் ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், தபால் திணைக்களம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று (08) இரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தபா