வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுச் செயற்பாடான 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்ட நிகழ்வுகள் இன்று (08) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறுகிறது.
அந்தவகையில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு ஆகியன சங்கிலியன் பூங்காவில் காலை 10.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை இடம்பெறுகிறது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி விசேட நிருபர்