Friday, March 29, 2024
Home » கத்திக்குத்துக்கு இலக்காகி கடற்படை வீரர் ஒருவர் மரணம்

கத்திக்குத்துக்கு இலக்காகி கடற்படை வீரர் ஒருவர் மரணம்

- துறைமுக பொலிஸார் விசாரணை

by Prashahini
November 8, 2023 11:53 am 0 comment

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இன்று (08) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தளை கன்தேகெதர பகுதியைச் சேர்ந்த கே. எம். டி. எஸ்.பண்டார எனவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT