Tuesday, April 16, 2024
Home » ஹட்டனில் போட்டோகொப்பி மெஷின்கள் வழங்கிவைப்பு

ஹட்டனில் போட்டோகொப்பி மெஷின்கள் வழங்கிவைப்பு

by mahesh
November 8, 2023 10:00 am 0 comment

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் -01, 02, 03, 04 ஆகியவற்றுக்கு போட்டோகொப்பி மெஷின்களை நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை (07) வழங்கி வைத்துள்ளார்.

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் வைத்து இந்த மெஷின்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய இந்த போட்டோகொப்பி மெஷின்கள், மேற்படி கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷால் அழகக்கோன், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT