Thursday, March 28, 2024
Home » தீபாவளியையிட்டு – கண்டியில் உலர் உணவு வழங்கல்

தீபாவளியையிட்டு – கண்டியில் உலர் உணவு வழங்கல்

by mahesh
November 8, 2023 6:00 am 0 comment

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கண்டி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தோட்டப்புற மக்களுக்கு கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், தீபாவளிப் பண்டிகையை பிரதிபலிக்கும் தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் கண்டி தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் பி. குமாரதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் எஸ்.முத்தையா, பெ.பழனியப்பன், தொழிலதிபர் மூர்த்தி, மலையக கலாசார சங்கத் தலைவர் எஸ்.பரமேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கலஹா, தெல்தோட்டை, பன்விலை ஹந்தானை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 750 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

மாவத்தகம தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT