Thursday, April 25, 2024
Home » பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை
எரிவாயு விலைகள் உயர்ந்தாலும்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை

பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

by damith
November 7, 2023 7:20 am 0 comment

எரிவாயு விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க விரும்பவில்லையென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயுக்களின் தேவைகள் வெகுவாக குறைந்துள்ளதால், தொழில்துறையை நிலைநிறுத்துவதற்கு தாங்கள் ஏற்கனவே போராடி வருவதாகவும், எனவே பேக்கரி பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு, எரிபொருள், மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு, உற்பத்தி செலவை உயர்த்தியுள்ளதால், தொழில் துறையை ஆதரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பது, மக்களின் கொள்வனவு ஆற்றலை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவற்றைக் கருத்திற்கொண்டே, பேக்கரின் உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்காது பழைய விலைகளைப் பேணத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT