Friday, March 29, 2024
Home » கிரிக்கட் சபைக்கு முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
மோசமான நிர்வாகத்தால் அணி தோல்வி

கிரிக்கட் சபைக்கு முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

by damith
November 6, 2023 7:20 am 0 comment

கிரிக்கட் சபைக்கு முன்னால் ரசிகர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (05) நடத்தப்பட்டது.இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு மோசமான நிர்வாகமே காரணமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.இதனால்,கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தையடுத்து,கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் சுற்றுவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தித்து வருகிறது.இதனால், விரக்தியடைந்த ரசிகர்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினர் மற்றும் தேர்வாளர் குழுவினரை உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கோரி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT