Friday, March 29, 2024
Home » அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்தால் கைது

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்தால் கைது

by damith
November 6, 2023 8:00 am 0 comment

நுகர்வோர் அதிகார சபை அதிரடி நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை, கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகார சபை இன்று முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி நேற்று முதல் அமுலாகும் வகையில், வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும்.

பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 350 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT