தினேஸ் சாப்டரின் விசாரணையில் நீதி நிலைநாட்டப்பட்டுள் ளதால், நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு நிறைவுக்கு வந்துள்ளதாகவும் தினேஸ் சாப்டரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்தே,அவரது குடும்பத்தினர் இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தினேஸ்சாப்டர் கொலை செய்யப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 01 இல்,
வெ ளியான இந்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக உணர்கிறோம்.இதனால்,வலிமிகுந்த நீண்டகால காத்திருப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இத்தீர்ப்பில் நாங்கள் நிம்மதியடைகின்றோம். கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் நிலவின.இதனால், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
கடந்த பல மாதங்களாக தினேஸின் உடல் தோண்டப்பட்டு ஒய்வுமறுக்கப்பட்டது. நாங்கள் கல்லறையின்றி அந்த துயரத்தை அனுஸ்டித்தோம்.
தற்போது, தினேஸ் கொலைசெய்யப்பட்டார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது மரணம் குறித்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தியது ஒரு ஆரம்பம் மாத்திரமே என்பதை உணர்ந்துள்ளோம்.
நீதித்துறையினர், தொடர்ந்தும் தினேசின் மரணத்திற்கு நீதியை நிலைநாட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.