210
சமஸ்டி அடிப்படையிலான தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற “கிழக்கின் சிவந்த சுவடுகள்” நூலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு,பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் பிரதான பாத்திரத்தை, இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.