மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இணைந்து பிரதேச தொழிற்சந்தை நிகழ்ச்சித் திட்டத்தை அண்மையில் நடத்தின. அட்டாளச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம். ஏ சி.அகமது ஷாபிரின் நெறிப்படுத்தலில் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபீர் தலைமையில் அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவில் இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஸாபீர் கருத்துத் தெரிவிக்கையில், “மரபு ரீதியான தொழில் முறைகளை கைவிட்டு நவீன காலத்திற்குப் பொருத்தமான தொழில்துறைகளை தெரிவு செய்ய வேண்டும். இளைஞர், யுவதிகள் அரச தொழிலை மட்டும் நம்பியிராது தனியார் துறையிலும் கால்பதிக்க வேண்டும்.
இதன் மூலம் கூடுதலான ஊதியங்களைப் பெற வாய்ப்பு இருக்கின்றது. கணினி பயிற்சியை பெற்றுக் கொள்வது கட்டாயத் தேவையாக தற்பொழுது உள்ளது. எனவே எதிர்காலத்தில் எல்லோரும் கணினிப் பயிற்சியை பெற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி இணைப்பாளர் அருளானந்தம், திறன் அபிவிருத்தி இணைப்பாளர் நடனகுமார், அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோதர் கே. வீ. சலீம், பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ. எல். தமீம், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீவக்குமார், இறக்காமம் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனீபா மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி பதிவாளர் எம். ஏ. சி. றகீப் மற்றும் இளைஞர், யுவதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம் .எப்.எம்.நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)