Friday, March 29, 2024
Home » நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

- மத்திய, சப்ரகமுவ, வடமத்தியிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவிலும் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
November 4, 2023 9:03 am 0 comment

இன்றையதினம் (04) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT